யாழில் பங்கசுடன் கட்டைத்தூள் உற்பத்தி செய்தவருக்கு நீதிமன்றின் உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் பங்கசு (Fungus) தொற்றுடைய கட்டைத்தூளை உற்பத்தி செய்த நபருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவைப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பொலிகண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மதியானந்தகுரு நந்தகுமார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது விற்பனை நிலையமொன்றில் பங்கசு தொற்றுடன் கூடிய கட்டைத்தூள் கண்டறியப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை
இது தொடர்பாகக் கட்டைத்தூளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கும் அதனை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விற்பனையாளரும் உற்பத்தியாளரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, விற்பனையாளரைக் கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இருப்பினும், பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தரமற்ற பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளரைக் கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்ததுடன் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 7 மணி நேரம் முன்