இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் விடுத்துள்ள எச்சரிக்கை

United States of America China India
By Kathirpriya Oct 22, 2023 04:42 AM GMT
Report

எப்போதும் இல்லாதவாறு இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினையும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா மேற்கொண்ட நில ஆக்கிரமிப்புக்களினை எதிர்த்து, இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து சீனாவுடன் மோதல்கள் இடம்பெற்றது இந்த மோதலில் 19 இராணுவ வீரர்கள் வரை வீரமரணம் அடைந்தனர்.

ஈரானின் தலையை நசுக்கவும் இஸ்ரேல் தயார் : நிர் பர்கத்

ஈரானின் தலையை நசுக்கவும் இஸ்ரேல் தயார் : நிர் பர்கத்

அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் 20 முறை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன.

அண்மையில் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பு படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்தன.அதேபோல் எல்லைகளில் இருந்த படைகளை கணிசமாக விலக்கியும் இருந்தன.

இவ்வாறிருக்கையில் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றினை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

மின்சாரத்துறை செயற்றிறன் மிக்கதாக அமைய வேண்டும் : கத்ஸ்யரினா ஸ்விரிட்சென்கா

மின்சாரத்துறை செயற்றிறன் மிக்கதாக அமைய வேண்டும் : கத்ஸ்யரினா ஸ்விரிட்சென்கா

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் விடுத்துள்ள எச்சரிக்கை | India Concerns Over Chinese Forces Deployed Along

அந்த அறிக்கையில் சீனா குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 500 அணு ஆயுதங்களை செயல்படும் நிலையில் சீனா வைத்துள்ளது என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் சீனாவிடமுள்ள அணு குண்டுகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி உயிரிழப்பு!

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி உயிரிழப்பு!

அமெரிக்காவுக்கும் பேராபத்து

மேலும், 2022 ஆம் ஆண்டில் புதிதாக 3 ஏவுகணைத் தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது என்றும் இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஏவுகணைகளுக்கு 5,500 கி.மீ. தொலைவுக்கு சீனா இலக்குகளையும் நிர்ணயித்துள்ளது, இது அமெரிக்காவுக்கும் பேராபத்தாக அமையும்.

இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்போம் : ஐ.தே.க சூளுரை

இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்போம் : ஐ.தே.க சூளுரை

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் விடுத்துள்ள எச்சரிக்கை | India Concerns Over Chinese Forces Deployed Along

மேலும் மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ தளங்களை அமைக்கவும் சீனா மும்முரம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் கடந்த ஆண்டு (2022) 340 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருந்த சீனா தற்போது அந்த எண்ணிக்கையினை 370 இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 435 ஆக அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

 இராணுவ மோதல்

மேலும், தாய்வானை முற்றாக ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு, பான்காங் ஏரி பகுதிகளிலும் பூட்டானின் டோக்லாம் பீடபூமி பகுதியிலும் சீனா தனது இராணுவ நடவடிக்கையினை அதி தீவிரப்படுத்தியுள்ளதாகவும், புதிதாக போர் விமான தளங்கள், இராணுவ ஹெலிகாப்டர் தளங்கள்,இராணுவ குடியிருப்புகளை சீனா கட்டமைத்துள்ளதாகவும் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலகமே இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்தின : சரத் வீரசேகர

இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலகமே இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்தின : சரத் வீரசேகர

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் விடுத்துள்ள எச்சரிக்கை | India Concerns Over Chinese Forces Deployed Along

இந்த பகுதிகளில் ஏற்கனவே இராணுவ மோதல் நிகழ்ந்து பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையினை நடத்திக் கொண்டே இத்தகைய இராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியிருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக டில்லி ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காசாவில் இருப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் : இஸ்ரேல் அறிவிப்பு

காசாவில் இருப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் : இஸ்ரேல் அறிவிப்பு

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025