இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள்

Sri Lanka Police Indian fishermen Sri Lanka Sri Lanka Navy Northern Province of Sri Lanka
By Pavan Nov 19, 2023 03:57 AM GMT
Report

 யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்தனர்.

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்

உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவு 

அதனையடுத்து, இன்று இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்தொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை கடற்படைக்கு இலங்கை அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு பறந்தது.

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள் | India Have A Border Dispute With Sri Lanka Army

இந்நிலையில் 22 இந்திய கடற்தொழிலாளர்களும் அவர்களது இரண்டு படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் வடபகுதி கடற்தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எமது வளத்தை அழித்து கொள்ளையிட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்யாது இந்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கு பணிந்து இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்

கடற்றொழில் அமைச்சர் 

அதிபரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடற்றொழில் அமைச்சரும் கண்ணைமூடி ஒத்துழைப்பு வழங்குகின்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார் - வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள் | India Have A Border Dispute With Sri Lanka Army

நேற்று தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற நிலையில் இந்திய கடற்தொழிலாளர் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கைதான தமது உறவுகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததோடு தமது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியதாக இந்திய தகவல்கள் தெரிவித்தன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


GalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்