இலங்கைக்கு இந்தியா வழங்கிய கால அவகாசம்
இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் வழங்கிய கடனை மீளச்செலுத்த 12 ஆண்டு கால அவகாசம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் ரணில் விரைவில் இந்தியா செல்லவுள்ள நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை செலுத்த வேண்டிய கடன்

இலங்கை, அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி, 3 பில்லியன் டொலர்களை சீனாவுக்கும் 2.4 பில்லியன் டொலர்களை பாரிய கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் கிளப்புக்கும், 1.6 பில்லியன் டொலர்களை இந்தியாவுக்கும் செலுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் சிறி லங்கா அரசாங்கம் தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் பின்னணியில், இந்தியாவின் கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு மீள செலுத்த வேண்டிய கடன்

இதற்கமைய நிதியத்தின் உதவிகள் முழுமையாக கிடைக்கப்
பெற்றதன் பின்னர், இலங்கை இந்தியாவுக்கு மீள செலுத்த
வேண்டிய கடனை 10 முதல் 12 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்
என இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின்
தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்