ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியாக கருதப்படும் ரவிச்சந்திரன் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

india murder high court ravichandran rajiv gandhi
By Kalaimathy Jul 29, 2021 10:25 AM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனுக்கு சிறைவிடுப்பு வழங்குவதில் என்ன தடை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி 3 மாத காலம் சிறைவிடுப்பு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். எனினும் ரவிச்சந்திரன் மத்திய அரசின் செயல் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சிறைவிடுப்பு கோரிக்கையை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 2 மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தாயார் ராஜேஸ்வரி மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அரசு தரப்பில் இது குறித்து பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளியான பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது குறித்து அரசிடம் உரிய தகவல் பெற்று மன்றுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் மகன் ரவிச்சந்திரன் இருப்பதாக தனது மனுவில் கூறியுள்ள ராஜேஸ்வரி , பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015