பாடசாலை மாணவி தற்கொலை- தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்!
தமிழகம் திருச்சியில் மதம் மாறும்படி வற்புறுத்தியதாக தெரிவித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பாடசாலையில் கல்வி கற்கும் 12 ஆம் வகுப்பு மாணவி லாவண்யா என்பவரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருள்ளார்.
பாடசாலையிலுள்ள விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக லாவண்யா வெளியிட்ட கானொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பாடசாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் விடுதி பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, டுவிட்டரில் Justice for Lavanya என்ற ஹேஷ்டேக்கும் வைரலாக பரவிவருகின்றது.
இந்நிலையில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளார்.