மைதானத்தில் குவிந்த சென்னை ரசிகர்கள் - விறுவிறுப்பான இறுதி ஒருநாள் போட்டி..!
இந்தியா-அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. காரணம் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக காணப்படுகிறது.
இதனால் இந்தியா, அவுஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டி
சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தவண்ணம் இருக்கின்றனர்.
இன்றைய போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா அணி சற்றுமுன்னர் வரை ஆட்டமிழப்பின்றி 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.