இலங்கையிலும் மோடியின் நாட்டாமை..! வெளிச்சத்திற்கு வந்த ரகசியங்கள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டாமை இலங்கையிலும் இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறிய அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்கிற்கு இந்தியா கொடுக்கப் போகும் அழுத்தம் தொடர்பிலும் பல ரகசிய தகவல்களை கூறியுள்ளார்.
45 நிமிட சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய வெளி விவகார அமைச்சர் டொக்டர் ஜெய்சங்கர் 45 நிமிடங்கள் அதிகாரிகள், உதவியாளர்கள் கூட இல்லாமல் தனியாக பேசியிருக்கிறார். அதில் நடந்து விடயங்கள் இரண்டே இரண்டு தான்.
தமிழினத் துரோகி என்று சொல்லப்படும் ராஜபக்சர்களுடைய சார்பிலேயே ரணில் விக்ரமசிங்க பொம்மையாக அதிபராக ஆக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவியில் கூட இலங்கை அரசாங்கத்தால் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அந்த உதவியில் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றார்கள்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகள் இந்தியாவினுடைய கதவினை தட்டினார். ஆனால், நரேந்திர மோடி அவரது அழைப்புக்கு காது கொடுக்கவில்லை.
ரணிலின் 10 நாள் இந்திய விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் மூலமாக இதற்கான சந்திப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பத்து நாள் விஜயமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக அவர் கூறுகின்றார்.
இலங்கையில் மோடியின் நாட்டாமை, கச்சதீவு தொடர்பில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் முக்கிய தகவல், இலங்கை - இந்திய உறவின் நிலை தொடர்பில் அவர் கூறும் விடயங்களை காணொளில் காண்க,