மசாஜ் நிலையத்தில் கைகலப்பு! இந்தியர் ஒருவர் அதிரடி கைது
ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் படி, திஸ்ஸமஹாராமவின் மஹசென்புர பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்திற்கு ஒரு பிரெஞ்சுப் பெண் மசாஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார்.
அதன்போது, மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான பெண்ணின் கணவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தனது இந்திய நண்பரிடம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம்
பின்னர், இந்த விடயம் குறித்து விசாரிக்க இந்திய நண்பர் அங்கு சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இது தொடர்பாக மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) தகவல் அளித்துள்ளார்.

அதன்படி, சந்தேகத்திற்குரிய இந்தியர் திஸ்ஸமஹாராம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் தெபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் பிரெஞ்சுப் பெண்ணும் தடயவியல் மருத்துவரிடம் முற்படுத்தப்படுவதற்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |