கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்தியர்!
இலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 2.87 மில்லியன் மதிப்புள்ள மேற்படி போதைப்பொருளுடன் அவரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று(14) அதிகாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 24 வயதான இந்தியர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விசாரணைகளின்படி, அவர் தாய்லாந்தின் பெங்காக்கில் போதைப்பொருளை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்து, பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH-179 மூலம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது, அவரது பயணப் பெட்டியின் பக்கவாட்டுப் பலகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் மற்றும் 87 கிராம் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |