இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய படகுகள் - 22 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று(21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வந்து ஒரே அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
