இந்திய வெளிநாட்டுக் கடன் 620.7 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்கள் குறித்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2 சதவீதம் என்பதிலிருந்து 2022 மார்ச் இறுதியில்,19.9 சதவீதமாக குறைந்துள்ளது.
ஓராண்டுக்கு முன் வெளிநாட்டுக்கடன்
அன்னிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில் ஓராண்டுக்கு முன் 100.6 சதவீதம் என்பதை விட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன் லேசாக குறைந்துள்ளது.
மேலும், நீண்டகால கடன் அளவு 499.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், குறுகிய காலக்கடன் அளவு 121.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டு மொத்தக்கடனில் 90 சதவீதம் வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள், குறைந்தகால வர்த்தகக்கடன், பலவகை கடன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

