சீனாவை அடுத்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள இந்திய கடற்படை கப்பல்
இந்திய(india) கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் கல்பேனி(INS Kalpeni) இன்று(19) கொழும்பை(colombo) வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர்(sri lanka navy) கடற்படை மரபுகளுக்கமைய உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்திய கடற்படையின் கட்டளை அதிகாரி, கமாண்டர் சுனில் குல்ஹாரி(Sunil Kulhari), இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்திப்பார்.
தேடுதல், மீட்பு நடவடிக்கை
ஐஎன்எஸ் கல்பேனி என்பது இந்திய கடற்படையின் கார் நிகோபார்-வகுப்பு வாட்டர்ஜெட் எஃப்ஏசி(Waterjet FAC) ஆகும், இது ஒக்டோபர் 14, 2010 அன்று தொடங்கப்பட்டது. இந்த கப்பலுக்கு லட்சத்தீவுகளின் குழுவில் உள்ள கல்பேனி தீவின் பெர் சூட்டப்பட்டுள்ளது. இது கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் முதன்மைப் பாத்திரத்துடன் கொச்சியில் அமைந்துள்ளது. இந்த கப்பல் கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் பறிமுதல் செய்தல் மற்றும் தேடுதல், மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றது.
முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ள கப்பல் பணியாளர்கள்
இலங்கைக்கு வருகை தந்த இந்த கப்பல் 19-21 ஒக்டோபர் 2024 வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும். கப்பல் அத்தியாவசிய தொழில்நுட்ப கருவிகளை கொண்டு வந்துள்ளது, அவை சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.
கப்பல் பணியாளர்கள் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
கடந்த வாரம் சீனாவின் பாய்மர பயிற்சி போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்ற நிலையில் இந்திய கடற்படை கப்பல் தற்போது வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |