சோதனை நடத்த சென்ற காவல்துறையினரை நாய்களை விட்டு கடிக்க செய்த பெண்!
களுத்துறையின் கல்பாத்த பகுதியில் உள்ள சட்டவிரோத மதுக்கடை ஒன்றில் சோதனை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகள் குழுவை, பெண் ஒருவரின் எட்டு மூர்க்கமான நாய்கள் தாக்கி கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோரமான தாக்குதலில், அங்குருவத்தோட்டாவின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில், பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர் நாகோட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருகையில்,
களுத்துறை வடக்கு காவல்துறை
களுத்துறை வடக்கு காவல்துறை பிரிவின் சொஹோன பஹல, தியாகம பகுதியில் சட்டவிரோத மதுபானக் கும்பல் அமைந்துள்ள வீடு குறித்து காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

8 முதல் 10 அடி உயரமுள்ள சுவர்களால் சூழப்பட்ட இந்த வளாகத்தில், குடிப்பவர்களுக்குத் தேவையான பானங்களை ஒரு உணவகம் என்ற வடிவில் வழங்கி, இந்த கும்பல் நீண்ட காலமாக மிகவும் நுட்பமான முறையில் இயங்கி வந்துள்ளது.
களுத்துறை காவல்துறையின் இரண்டு சிறப்புப் பிரிவுகள் இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த இடத்தில் சோதனை நடத்த முயன்றபோதிலும், அது சுமுகமாக நடைபெறாததால்,அதை தொடர்ந்து 27ஆம் திகதியன்று இந்தச் சோதனையை நடத்தப்பட்டது.
இதன்போது காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தி, 1000 மில்லி லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரை கைது செய்தனர்.
இதன்போது, சந்தேகிக்கப்படும் கடத்தல்காரரின் மனைவி, வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் ராட்வைலர் உள்ளிட்ட எட்டு விலையுயர்ந்த மற்றும் மூர்க்கமான நாய்களின் கூண்டுகளைத் திறந்து, அதிகாரிகளை கடிக்க செய்யுமாறு நாய்களை தூண்டினார்.
பணியின்போது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறை மற்றும் தாக்குதல் குற்றச் செயலுக்காக, கடையின் உரிமையாளரையும், அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |