கிழக்கில் இந்திய கடற்படைக்கப்பல் - பயிற்சி ஈடுபாடுகள் குறித்து வெளியான தகவல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘பட்டி மால்வ்’ கப்பல் திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் முறையான பயணமாக இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல் பாட்டி மால்வ் வந்துள்ளது என்று இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.
101 பேர் கொண்ட குழுவினரோடு வருகைதந்துள்ள குறித்த கப்பல் (INS Batti Malv), கடற்படை மரபுகளின்படி சிறிலங்கா கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை வரவேற்கப்பட்டது என்று சிறிலங்கா கடற்படையின் அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச யோகா தினம்

இன்றைய தினம், 21 ஜூன் 2023 அன்று திட்டமிடப்பட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா அமர்வில் பங்கேற்பது உட்பட பல்வேறு பயிற்சி ஈடுபாடுகள், கப்பலின் பயணத்தின் போது இடம்பெற்றன .
கப்பலின் கட்டளை அதிகாரி, லெப்டினன்ட் கமாண்டர் மான் சிங் எம் மானே, கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு கடற்படைத் தளபதி மற்றும் கமாண்டன்ட் தன்னார்வ கடற்படைப் படையான ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை இதன்போது சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
