பரிகார பூசை எனக் கூறி தங்க நகைகளை அபகரித்த இந்தியர்கள்

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation India Gold
By Shadhu Shanker Dec 22, 2023 08:23 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவியிடம் பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்முனை தலைமையக காவல் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை(20) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நேற்றைய தினம் (21)காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்)

மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்)

பரிகார பூஜை 

சம்பவ தினமன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியிடம் உரையாடியுள்ளனர்.

பரிகார பூசை எனக் கூறி தங்க நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Indian Stole Jewel Incident Srilanka Police Ampara

இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்கலாக ஏனைய நகைகளை இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

நகையை மண்சட்டிக்கு மாற்றல்

இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளனர்.

பரிகார பூசை எனக் கூறி தங்க நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Indian Stole Jewel Incident Srilanka Police Ampara

உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை தம்வசம் எடுத்து கொண்டு அந்த பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

காவல்துறையினரிடம் முறைபாடு

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார்.

பரிகார பூசை எனக் கூறி தங்க நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Indian Stole Jewel Incident Srilanka Police Ampara

இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை காவல் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024