இந்தியாவின் நலனுக்கே முக்கியத்துவம்: ட்ரம்பிற்கு இந்தியா தக்க பதிலடி
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
l;ரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், '' ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்
அப்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என உறுதி அளித்தார். இந்த நடவடிக்கை, உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபடும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் '' எனத் தெரிவித்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்தியமத்திய அரசு, '' கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' எனத் தெரிவித்து இருந்தது.
ட்ரம்புடன் மோடி பேசவில்லை
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: என்னிடம் உள்ள தகவலின்படி, நேற்று ஜனாதிபதி ட்ரம்ப்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை.என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
