சிக்குன்குனியாவால் அவதிப்படும் ஐ.தே.க வேட்பாளர்கள் : தேர்தல் பிரசாரம் நிறுத்தம்
ஐ.தே.கவின்(unp) பல வேட்பாளர்களுக்கு சிக்குன்குனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க(sagala ratnayaka) தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டேயில் உள்ள சிறிகொத்த தலைமையகத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை
சில வேட்பாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,
பலர் சிக்குன்குனியாவால் பாதிப்பு
"நாடு முழுவதும் சிக்குன்குனியா மற்றும் டெங்கு பரவலாக உள்ளது. அரசாங்கம் இதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வேட்பாளர்களில் பலர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு(colombo) வடக்குத் தொகுதியைச் சேர்ந்த சதாமாலி தேர்தல் பிரசாரத்தில் முன்னணியில் இருந்தார். மூன்று வாரங்களாக அவரால் தேர்தல் பிரசார நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. அவரால் நடக்க முடியாது. எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் நாடு முழுவதும் சிறு குழந்தைகளும் முதியவர்களும் அவதிப்படுகிறார்கள்."என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
