ஆசிரியர்கள்மற்றும் அதிபர்கள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்
teachers
ministry of education
principal
By Sumithiran
அனைத்து அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைத்த அரசாங்கம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் பாடசாலை திறக்கப்படாத போதிலும் கடமைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அறிவித்தலை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா அறிவித்திருந்தார்.
எனினும் தற்போது அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு முந்தைய முடிவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
மாறாக வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் ஒன்லைன் ஊடாக கற்பித்தலை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை தமது கோரிக்கை நிறைவேறும்வரை தாம் ஒன்லைன் கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து விலகியிருப்பதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி