கடற்படை படகு விபத்துக்கான காரணம்! ஆரம்பமாகும் தீவிர விசாரணைகள்
Sri Lankan Peoples
Sri Lanka Navy
By Dhilak
அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக இலங்கை விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412ஆகிய இரண்டு உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்பதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்