சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்

Batticaloa Sri Lanka SL Protest Japan Switzerland
By Shadhu Shanker Mar 07, 2024 11:55 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 174 நாட்களாக தங்களது மேய்ச்சல் தரை நிலங்களை அத்து மீறிய பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.

பண்ணையாளர்களின் குறித்த கோரிக்கைகளுக்கு மூன்று நீதிமன்றங்களின் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான தீர்வை வழங்கி அதனை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார், இது குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது.

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்! கூறிய காட்டமான பதில்

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்! கூறிய காட்டமான பதில்

சர்வதேச நாடுகளின் கவனம்

ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மேற்படி விவகாரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(6) மூன்று நாட்டின் தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடியது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள் | International Attention Ambassadors Met Farmers

அதுவும் இலங்கையின் நல்லிணக்கம், மீள்நிகழாமை பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாட்டு தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்தமை எதிர்காலத்தில் இந்த பிரச்சினை இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஜஸ்டின் பிளோட், ஜப்பான் தூதுவர் மிஷ்கோசி கிடாகி, தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்லி எட்வின் சாள்க் ஆகியோரே நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது பண்ணையாளர்களையும் சந்தித்திருந்தனர்.

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரமாட்டேன்! தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரமாட்டேன்! தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

தொடர் போராட்டம்

அந்த வகையில் கடந்த 174 நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை மூடி அறைக்குள் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு தீர்வை பெற முயற்சிப்பதாக அவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள் | International Attention Ambassadors Met Farmers

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட  வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், மற்றும் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் நிமலன் ஆகியோர் மேற்படி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த போது இந்த சந்திப்பின் ஊடாக தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மூன்று நாட்டு தூதுவர்களும் இந்த பிரச்சினையை அதிபர் ரணிலின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்று தரவேண்டும் என கோரிக்கை விடுத்து மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் என்ன நடக்கிறது என்ற உண்மைகளை ஆதாரங்களுடன் அறிக்கையாக தூதுவர்களுக்கு வழங்கியதாக தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் பண்ணையாளர்களுடன் இணைந்து யாழ்பாணத்தில் இருந்து வருகை தந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், பரசுராமன், பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த 13 இலங்கையர்கள்...!

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த 13 இலங்கையர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011