சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்

Batticaloa Sri Lanka SL Protest Japan Switzerland
By Shadhu Shanker Mar 07, 2024 11:55 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 174 நாட்களாக தங்களது மேய்ச்சல் தரை நிலங்களை அத்து மீறிய பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.

பண்ணையாளர்களின் குறித்த கோரிக்கைகளுக்கு மூன்று நீதிமன்றங்களின் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான தீர்வை வழங்கி அதனை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார், இது குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது.

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்! கூறிய காட்டமான பதில்

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்! கூறிய காட்டமான பதில்

சர்வதேச நாடுகளின் கவனம்

ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மேற்படி விவகாரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(6) மூன்று நாட்டின் தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடியது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள் | International Attention Ambassadors Met Farmers

அதுவும் இலங்கையின் நல்லிணக்கம், மீள்நிகழாமை பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாட்டு தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்தமை எதிர்காலத்தில் இந்த பிரச்சினை இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஜஸ்டின் பிளோட், ஜப்பான் தூதுவர் மிஷ்கோசி கிடாகி, தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்லி எட்வின் சாள்க் ஆகியோரே நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது பண்ணையாளர்களையும் சந்தித்திருந்தனர்.

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரமாட்டேன்! தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரமாட்டேன்! தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

தொடர் போராட்டம்

அந்த வகையில் கடந்த 174 நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை மூடி அறைக்குள் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு தீர்வை பெற முயற்சிப்பதாக அவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள் | International Attention Ambassadors Met Farmers

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட  வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், மற்றும் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் நிமலன் ஆகியோர் மேற்படி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த போது இந்த சந்திப்பின் ஊடாக தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மூன்று நாட்டு தூதுவர்களும் இந்த பிரச்சினையை அதிபர் ரணிலின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்று தரவேண்டும் என கோரிக்கை விடுத்து மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் என்ன நடக்கிறது என்ற உண்மைகளை ஆதாரங்களுடன் அறிக்கையாக தூதுவர்களுக்கு வழங்கியதாக தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் பண்ணையாளர்களுடன் இணைந்து யாழ்பாணத்தில் இருந்து வருகை தந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், பரசுராமன், பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த 13 இலங்கையர்கள்...!

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த 13 இலங்கையர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கிளிநொச்சி, Toronto, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
மரண அறிவித்தல்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023