ஏன் இன்னும் மரணம் வரவில்லை:யாழில் முதியவர் எடுத்த விபரீத முடிவு
Jaffna
Death
By Kajinthan
தனக்கு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம்(01) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமானதாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி