பல்கலைக்கழக மாணவர்களை கலைத்து கலைத்து கொட்டிய குளவிகள்
Kandy
University of Peradeniya
Sri Lanka
By Sumithiran
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளான எட்டு மாணவர்கள் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளவித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 6 மாணவர்களும் இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
குளவி கூட்டை அகற்ற நடவடிக்கை
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னால் உள்ள கலஹா சந்திக்கு அருகிலுள்ள பால் கடைக்கு அருகில் குளவித் தாக்குதல் நிகழ்ந்தது. அந்தப் பகுதியில் குளவி கூடு எதுவும் தெரியாததால், ஏதேனும் குளவி கூடு இருந்தால், அவற்றை அகற்ற பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி