பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர்

Israel Palestine Israel-Hamas War
By Eunice Ruth Oct 27, 2023 02:37 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள் மற்றும் சில சர்வதேச நாடுகள், பலஸ்தீன் எதிர்நோக்கும் நிலை தொடர்பில் கருத்து வெளியிடாது தொடர்ந்தும் மௌனம் காப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பலஸ்தீன தூதரகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் இதனை தெரிவித்துள்ளார்.

போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்

பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளமை பாரிய குற்றச்செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் | International Countries Silence Palestine Israel

பல நாட்களாக இரகசியமாக காக்கப்பட்டு வந்த விடயத்தை தற்போது இஸ்ரேல் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அதன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம்(படங்கள்)

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம்(படங்கள்)

காசாவை குறிவைக்கும் இஸ்ரேல்

குறிப்பாக காசாவை குறிவைத்து இஸ்ரேல் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால், அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் இழந்துள்ளதாக கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் | International Countries Silence Palestine Israel

குறித்த பகுதியில் வாழும் மக்கள் நீண்ட காலமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காசாவின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மௌனம் காக்கும் சர்வதேசம்

பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சில நாடுகள் தொடர்ந்தும் மௌனம் காப்பதாகவும் குறித்த தரப்பினர் குருடர்களை போல் நடந்து கொள்வதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், பலஸ்தீனர்கள் மனிதர்கள் இல்லையா எனவும் அவர்களது உயிருக்கு மதிப்பில்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் | International Countries Silence Palestine Israel

மேலும், பலஸ்தீன் ஏற்கனவே சமரசத்துக்கு இணக்கம் தெரிவித்திருந்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் எந்தவொரு குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் இதனை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் நன்கு நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் மேலும் தெரிவித்துள்ளார்.   

பலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ReeCha
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024