கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை
சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (15.07.2026) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்ற விடயம் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவைக் கைது செய்வதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்திரசேனவின் மனைவி
சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆவார்.

சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச காவல்துறை உள்ளிட்ட வெளிநாட்டு விசாரணைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆங்கில மொழி திறந்த பிடியாணை அவசியம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |