யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து : முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணை

Sri Lanka Police Sri Lanka Accident
By Shalini Balachandran Nov 11, 2024 12:07 AM GMT
Report

யாழ், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து காவல்துறையினர் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஜருள் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை (10) வான் - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தினை சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் பரிசோதிக்க முற்பட்ட வேளை சாரதிக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

முதன்முதலாக லெபனானில் கொல்லப்பட்ட சவுதி ஹிஸ்புல்லா தீவிரவாதி

முதன்முதலாக லெபனானில் கொல்லப்பட்ட சவுதி ஹிஸ்புல்லா தீவிரவாதி

விபத்து சம்பவம்

அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் காவல்துறையினர் தாக்கியதாகவும், அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை காவல்துறையினர் தட்டி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினை அடுத்து சனிக்கிழமை சுன்னாகம் காவல் நிலையம் முன்பாக மக்கள் கூடியமையால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, “காங்கேசன்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் காங்கேசன்துறைவீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.


விபத்தினை அடுத்து வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் வாகனத்தை வழிமறித்து சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தினை கேட்டுள்ளனர்.

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதி பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளின் விலையை குறைக்க முடியாது : ரில்வின் சில்வா பகிரங்கம்

எரிபொருளின் விலையை குறைக்க முடியாது : ரில்வின் சில்வா பகிரங்கம்

எதிராக நடவடிக்கை

சம்பவத்தில் விபத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தரும் , கைகலப்பில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக காளிங்க ஜெயசிங்க உத்தரவில், விசேட காவல்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து : முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணை | Investigation Related Chunnagam Accident Incident

காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கின்றன. அவற்றினை அவர்கள் மீற முடியாது.

அத்தோடு மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட குழுவினரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார், நிச்சயமா பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடையில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்

தேர்தல் மேடையில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024