இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் : வெளிப்படுத்திய அமைச்சர்!
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பாதாளத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று (18.11.2025) நடைபெற்ற நாடாளுமன்ற வரவு செலவு திட்ட குழு விவாதத்தில் பங்கேற்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனேந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவப்பு பிடியாணை
இதேவேளை, மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பிறகு, 07 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 06 கைத்துப்பாக்கிகள், 09 ரிவால்வர்கள், இரண்டு ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 7 மணி நேரம் முன்