தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
எனினும், ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டும் பணியை சில மாதங்களிலேயே தொடங்கலாம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) அறிவித்துள்ளது.
மீண்டெழும் ஈரான்
IAEA பணிப்பாளர் ரஃபேல் கிராஸ்ஸி, “ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் சில பகுதிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
சில வாரங்கள் அல்லது மாதங்களில் அவர்கள் மீண்டும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யத் தயாராகிவிடலாம்" என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “தாக்குதல்களில் ஈரானின் அணு மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதால், அந்த நாடு மீண்டும் அணுசக்தி நடவடிக்கைகளைத் தொடங்க குறைந்தது 20–30 ஆண்டுகள் ஆகும்” என தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவுக்கு ஏமாற்றம்
இவ்வாறானதொரு பின்னணியில், IAEA வெளியிட்டுள்ள தகவல், டர்ம்பின் கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
IAEA-வின் இந்த அறிக்கை, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீண்டும் செயல்படக்கூடிய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகின்றது.
இதேவேளை, குறித்த தகவல் ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலின் தாக்குதல்கள் எந்த பயனையும் அளிக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
