ஈரான் - இஸ்ரேல் போர்வெடிப்பும்... சுரேஸ்சாலே உயிர் ஆபத்து நடிப்பும்!
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் 100 ஆவது நாளில் ஈரான் இஸ்ரேலுக்குப் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளால் அலை அலையாக அதிர்ச்சி கொடுக்க அதற்குப் பதிலடியாக அதே பாலிஸ்டிக் வைத்தியத்தை இஸ்ரேல் திருப்பி வழங்க, மீண்டும் மத்திய கிழக்கு அதிர்கிறது.
கடந்த ஏப்ரலுக்குப் பின்னர் முதற்தடவையாக ஈரானும் இஸ்ரேலும் இவ்வாறு கடும் போர்முகம் கொள்ள உலகின் எரிசக்தி நெருக்கடி இன்னும் எகிறிக்கொள்கிறது.
உலக நிலவரம் இவ்வாறு பாலிஸ்டிக் அடிகளால் அதிர, இலங்கையின் உள்ளூர் நிலவரங்களோ, ஈஸ்டர் தாக்குதல் சதி குற்றச்சாட்டுக்குரிய சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவரான சுரேஷ் சாலே நேற்றிரவு கொழும்பின் பிரதான அரச மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைச் சுற்றாடலில் அதிரடிப் படையின் பாதுகாப்பு என்ற சில கதைகளுடனான பரபரப்பாக நகர்கிறது.
கடந்த வாரம் முதல் சுரேஷ் சாலே தனது சட்டவாளர்களின் உதவியுடன் நகர்த்தும் சாகும்வரை உண்ணாவிரதக் காட்சிகள் யாவும் நாளை மறுதினம் புதன்கிழமை அவரைச் சிறைக்கூண்டில் இருந்து வெளியேற வைக்கும் தந்திரங்களாகத் தெரிகின்றன.
கடந்த வருடம்கூட இவ்வாறான உயிராபத்து, ஐசியூ (ICU) பரபரப்புகளை நடத்தித்தான் முன்னாள் அரச தலைவர் ரணிலும் பிணையைப் பெற்று வெளியே வந்திருந்த நிலையில் சாலேயும் மருத்துவக் காட்சிகளை நகர்த்துவதால் இந்த வாரம் அவருக்கு ஒரு தற்காலிக விடுதலை வாரமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்ளூர் மற்றும் உலகப் பரபரப்புகளைத் தொட்டுவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 23 மணி நேரம் முன்