பற்றி எரியும் நாடுகள் - இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் - சூளுரைக்கும் ஈரான்
இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது நேற்று தீவிர தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முந்தையவற்றை விட மிகவும் வலிமையானது கடுமையானது, துல்லியமானது மற்றும் அழிவுகரமானதாக இருந்ததாக ஈரான் கூறியுள்ளது.
அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13 திகதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.
தீவிர தாக்குதல்
மறுபுறம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வசித்து வரும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து உள்ளது. இதன் மூலம் அங்கே தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இரு நாடுகளும் நான்காவது நாளாக பெரும் தாக்குதல்களை பரிமாறிக் கொண்ட நிலையில், இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் நேற்று இரவு அறிவித்துள்ளன.
மேலும் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும் ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
