ஈரானின் படைத்துறைக்கு பேரிழப்பு :உளவுத்துறை, ஏவுகணை தளபதி என ஒட்டுமொத்த உயர்மட்டமும் காலி
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின்ர் 20 உயர் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலைவேளை ஈரானிய ஆயுதப் படைகளின் உளவுத்துறைத் தலைவரான கோலம்-ரேசா மர்ஹாபி(Gholam-Reza Marhabi) இஸ்ரேலின் தொடக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக IDF குறிப்பிட்டது.
ஈரானிய ஆயுதப் படைகளின் உளவுத்துறைத் தலைவர்
"ஈரானிய ஆயுதப் படைகளுக்கான உளவுத்துறை சூழ்நிலை மதிப்பீடுகளுக்கு அவர் பொறுப்பேற்றார், மேலும் ஈரானின் மிக மூத்த உளவுத்துறை அதிகாரியாகக் கருதப்பட்டார்"
"கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முன்பு இஸ்ரேலுக்கு எதிரான உளவுத்துறை மதிப்பீடுகள், செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் போர் தயாரிப்புகளில் மர்ஹாபி முக்கிய பங்கு வகித்தார்," என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் " பாதுகாப்பு அமைப்பிற்குள் மிகவும் மதிக்கப்படும் மூத்த நபராகவும், வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட ஆயுதப் படைத் தலைமைத் தளபதி முகமது பகேரியின் நெருங்கிய கூட்டாளியாகவும்" இருந்தார் என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் -3யின் அதிரடி : இஸ்ரேலை நோக்கி சீறிப் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள் : வெற்றியா..! தோல்வியா..!
ஈரான் புரட்சிகர படைப்பிரிவின் ஏவுகணை தளபதி
அத்துடன், வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் "ஈரான் புரட்சிகர படைப்பிரிவின் ஏவுகணை தளபதி முகமது பகேரி" கொல்லப்பட்டதாக IDF தெரிவித்தது.
"ஈரானின் நீண்ட தூர தரையிலிருந்து மேற்பரப்பு மற்றும் கப்பல் ஏவுகணை திறன்களை பகேரி மேற்பார்வையிடுபவர்" என்று IDF கூறுகிறது.
இஸ்ரேலைத் தாக்கத் தயாராக ஒரு நிலத்தடி கட்டளை மையத்தில் சந்தித்தபோது, IRGC விமானப்படைத் தளபதி மற்றும் பிரிவின் பிற உயர் தளபதிகளுடன் பகேரி கொல்லப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
