போர்நிறுத்தம் நீடிக்காது.! ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை
ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டுமானால், அந்த நாடு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற தனது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரித்துள்ளார்.
இன்று ஹங்கேரியிலிருந்து ஏர் ஃபோர்ஸ் டூ விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஒப்பந்தம் ஒரு பரஸ்பர உடன்படிக்கை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடுமையான விளைவுகள்
அமெரிக்கா போர்நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைக்கான சூழலையும் வழங்கியுள்ள நிலையில், ஈரான் அதற்குப் பிரதிபலனாக நீரிணையை திறந்துவிட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் மிக உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: Vox
தற்போதைய நிலையில் ஒப்பந்தம் சரியான பாதையில் செல்வதாகவும், ஈரான் நீரிணையை திறக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜே.டி. வேன்ஸ், ஒருவேளை ஈரான் தனது நிபந்தனைகளில் இருந்து பின்வாங்கினால், அமெரிக்காவும் போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடராது என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறு ஈரான் ஒப்பந்தத்தை மீறினால், அந்த நாடு மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |