ஓமானில் தொடங்கும் ரகசிய டீல்: ராஜதந்திரத்திற்கு திரும்ப அழைக்கும் ஈரான்
ஈரான் (Iran) ராஜதந்திரத்தின் தர்க்கத்திற்கு திரும்புமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் (United States) சமீபத்திய இராணுவ தாக்குதல்களால் தங்கள் அணுசக்தி தளங்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
இருப்பினும், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இதன்படி ஓமானில் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், ட்ரம்பின் ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் ஈரானின் உறுதியான இராஜதந்திர அழைப்பு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தைகள்
ஈரான், பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முயல்வதாகவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் இராணுவ முன்னுரிமைகள் மற்றும் பென்டகனின் மாறுபட்ட மதிப்பீடுகள் இந்த முயற்சிகளை சிக்கலாக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய இந்த பேச்சுவார்த்தைகள் மீதான சர்வதேச கவனத்தையும், ஈரானின் அணுசக்தி திறன் குறித்து தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
