அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை! பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு ஈரான் அனுப்பிய செய்தி
ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான தனது சமீபத்திய முன்மொழிவை பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளது.
பேச்சுவார்த்தை செயல்முறை குறித்து அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த முன்மொழிவில் என்ன அடங்கியுள்ளது என்பதோ அல்லது ட்ரம்ப் அதை ஏற்றுக்கொள்வாரா என்பதோ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்காலிக போர் நிறுத்தம்
இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியதில் இருந்து கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக ஒரு முட்டுக்கட்டையான நிலையில் உள்ளன.

இதன்படி அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதாலும், ஹோர்முஸ் நீரிணை ஈரானால் முழுமையாக மூடப்பட்டிருப்பதாலும் இந்த நிலை நீடிக்கின்றது.
முன்னதாக பேச்சுவார்த்தைகள் பகிரங்கமாக முடங்கியது போல் தோன்றினாலும், தன்னையும் ஒரு சிலரையும் தவிர வேறு யாருக்கும் அதன் நிலை தெரியாது என்று ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.
இதற்கமைய இந்த கருத்து, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை உணர்த்துவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |