சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்: வெளியான அதிரடி அறிவிப்பு
சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) உடனான தங்கள் ஒத்துழைப்பை நிறுத்துவதான சட்டமூலம் ஒன்றை ஈரான் நிறைவேற்றியுள்ளது.
ஈரானில் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைக் தொடர்ந்து, அந்த நாட்டின் அணுசக்தி தொடர்பான நிலைப்பாடு கடுமையாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அணு ஆயுதம் உருவாக்க முயற்சிக்கவில்லை என்ற போதிலும், கடந்த வாரம் IAEA, ஈரான் "அணுசக்தி ஒப்பந்தங்களை மீறியது" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதே இஸ்ரேலின் தாக்குதலுக்கு நேரடியாக வழிவகுத்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
புதிய சட்டமூலம்
இந்த நிலையில், ஈரான் அணு தளங்கள் மீது தாக்குதல் நடந்தபோதும், அதை கண்டிக்க கூட முன்வராமல் IAEA தங்களது நம்பகத்தன்மையை விற்றுவிட்டதாக ஈரான் நாடாளுமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஈரான் அணுசக்தி அமைப்பு, IAEA உடனான ஒத்துழைப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்படாது, IAEA ஆய்வாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது மற்றும் தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்படாது என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தையும் கொண்டு வந்துள்ளனர்.
சமாதான அணுசக்தி திட்டம்
அத்துடன், இந்த சட்டத்தின் மொத்த அம்சங்களுக்கும் ஈரான் தேசிய பாதுகாப்புக் குழு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் தற்போது "சமாதான அணுசக்தி திட்டம்" என்ற பெயரில், மேலும் வேகமாக திட்டங்களை முன்னெடுக்கும் என அறிவித்துள்ளது.
மேலும், தாங்கள் நிச்சயமாக அணுசக்தி தொடர்பான தங்கள் பார்வையை மாற்றப்போவதாகவும் ஆனால் அது எந்த திசையில் என்பதை இப்போது சொல்ல முடியாது எனவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
