2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி
ஈரான் ஆண்கள் கால்பந்து அணி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலை மீறி வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தநிலையில், வருகின்ற ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகக் கோப்பை
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில், உலகக் கோப்பைப் போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் அணி உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு வரவேற்கப்படுகிறது.

ஆனால், அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் அவர்கள் இங்கு வருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கருத்து வெளியிட்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான், “நாங்கள் ஈரான் அணி விளையாடுகிறதா, இல்லையா என்பது பற்றித் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
கால்பந்து கூட்டமைப்பு
தற்போது வரை அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி.
உலகக் கோப்பையில் பங்கெடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக ஈரான் அணி எங்கும் சொல்லவில்லை.

சிறந்த அணியான ஈரான் உலக அரங்கில் நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
எனவே, அவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்து உலகக் கோப்பையில் பங்கெடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |