கண்ணீர் விட்டு அழுத ஈரான் வெளியுறவு அமைச்சர் - உணர்ச்சிகரமான காணொளி
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய உணர்ச்சிகரமான காட்சிகளை ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய அயதுல்லா அலி கமேனி, பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் மோதலின் தொடக்கக் கட்டத்தில் தனது மகள், மருமகன், கைக்குழந்தை பேத்தி மற்றும் மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலருடன் கொல்லப்பட்டார்.
இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி, மரணம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் பொதுவாக நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலி
இருப்பினும், தொடரும் மோதல் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக ஈரானிய அதிகாரிகள் இறுதிச் சடங்கைத் தாமதப்படுத்தினர்.
WATCH: Iran’s Ghalibaf cries during the farewell ceremony of late Supreme Leader Ali Khamenei. pic.twitter.com/3G1i7Fowxl
— Clash Report (@clashreport) July 3, 2026
கடந்த மாதம் ஒரு இடைக்கால போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னரே அந்த விழாக்களை ஏற்பாடு செய்தனர்.
ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் நடைபெறும் தொடர் இறுதி ஊர்வலங்களுக்கு முன்னதாக மறைந்த உச்ச தலைவரின் உடல் தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லாவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் நடைபெறும் சடங்குகளுக்குப் பிறகு அவரது உடலானது கோம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஈராக்கின் புனித நகரங்களான நஜாஃப் மற்றும் கர்பலாவிற்கு கொண்டு செல்லப்படும்.
கண்ணீர் விட்டு அழுத காட்சி
கமெனி, ஜூலை 9 அன்று மஷ்ஹத் நகரில் இமாம் ரெஸாவின் ஆலயத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படுவார்.
Un cadre du cercueil de la martyre Zahra Mohammadi Golpayegani, #petite-fille du Guide suprême martyr de la Révolution islamique, à la Mosalla de #Téhéran.#بدرقه_آقای_شهید_ایران#باید_برخاست#NousDevonsNousSoulever#MartyrKhamenei pic.twitter.com/8JemW4zW4A
— Iran en France (@IRANinFRANCE) July 3, 2026
இதேவேளை கமெனியின் மகனும் அவருக்குப் பின் வந்தவருமான மொஜ்தபா கமெனி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்