புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு எதிரான படுகொலை முயற்சி: ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனியைப் படுகொலை செய்ய முயற்சிப்பதற்கு எதிராக அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கான ஈரானியத் தூதர் காசெம் ஜலாலி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஊடக வலையமைப்பிற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலின்போதே அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
மொஜ்தபா கமேனியின் தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பழிவாங்கல் நடவடிக்கையைத் தீவிரமாக விரும்புவதாகத் தூதர் ஜலாலி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய மக்கள்
ஈரானிய மக்கள் இச்சம்பவத்தால் மிகுந்த கோபமடைந்துள்ளதாகவும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பதில் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் கடுமையான மற்றும் பாரிய பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |