தலைமறைவிலிருந்து வெளிவரும்போது வித்தியாசமான ஈரானை காணப்போகும் கமேனி
ஈரானின்(iran) உச்ச தலைவர் தலைமறைவாக இருந்து வெளிவரும்போது, அவர் மிகவும் வித்தியாசமான ஒரு நாட்டைக் காண்பார். " என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
"ஈரானிய மக்களின் நலனில்" என்ன இருக்கிறது என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், அதன் ராஜதந்திர அணுகுமுறை "புதிய வடிவத்தை" எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்க எந்த உடன்பாடும், ஏற்பாடும் அல்லது உரையாடலும் செய்யப்படவில்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
அணுசக்தி தளங்களுக்கு சேதம்
இதேவேளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு "அதிகப்படியான மற்றும் கடுமையான" சேதம் ஏற்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
சேதம் குறித்த மதிப்பீட்டை ஈரானின் அணுசக்தி அமைப்பு மேற்கொண்டு வருவதாக நேற்று (26)வியாழக்கிழமை மாலை ஒரு அரசு ஒளிபரப்பாளரிடம் தெரிவித்தார்.
ஆனால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்கவில்லை என்று கூறினார். குண்டுகள் மூன்று அணுசக்தி தளங்களை "முற்றிலும் அழித்துவிட்டன" என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுக்கு கமேனி பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க தாக்குதல்கள் "குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க" தவறிவிட்டன என்று கமேனி கூறினார்.
ஜூன் 13 அன்று இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து தலைமறைவாக இருக்கும் உச்ச தலைவர், குண்டுவீச்சு தாக்கத்தை ட்ரம்ப் "மிகைப்படுத்தியுள்ளார்" என்று வலியுறுத்தினார், மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெற்றியை அறிவித்தார்.
ஆனால் அரக்சியின் கருத்துக்கள் கமேனியின் கருத்திலிருந்து முற்றாக வேறுபட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
