போர் தணிந்த நிலையில் பாகிஸ்தானில் தரையிறங்கினார் ஈரான் ஜனாதிபதி
அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியபின்னர் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பேச்சை அடுத்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் ஆகியோர், தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஒரு இராணுவத் தளத்தில் செவ்வாயன்று ஈரான் தலைவரை வரவேற்றனர்.
ஒருநாள் பயணத்தில் முக்கிய பேச்சு
அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் வந்துள்ள பெஷெஷ்கியன், தனது ஒரு நாள் பயணத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார், மேலும் ஜனாதிபதி சர்தாரியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின்படி, செனட் தலைவர் யூசுப் ரசா கிலானி, தேசிய சட்டமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் மற்றும் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் ஆகியோரும் ஈரானியத் தலைவரைச் சந்திப்பார்கள்.
சுவிட்சர்லாந்து பேச்சை தொடர்ந்து பயணம்
ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பாகிஸ்தான் மற்றும் கத்தார் மத்தியஸ்தத்தில், சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்ற முக்கியமான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பெஷெஷ்கியனின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |