சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல்கள் : நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருவிட்ட, பல்லன்சேன மற்றும் புதிய மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நநிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அறிக்கையே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் குறிப்பிட்டார்.
36 பேர் உயிரிழப்பு
இதேவேளை நாட்டில் கடந்த ஐந்து வாரங்களில் நீர்கொழும்பு, மஹர, கொழும்பு மெகசின்,குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பள்ளஞ்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களினால் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை மதாதம் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினால் 10 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வாறான பின்னணியில் சனிக்கிழமை (1) மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 1 கைதி உயிரிழந்த நிலையில் 09 கைதிகள் காயமடைந்தனர்.
குருவிட்ட சிறைச்சாலை
அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 1 கைதி உயிரிழந்த நிலையில் 11 கைதிகள் காயமடைந்தனர்.

நேற்று முன்தினம் (7) காலை குருவிட்ட சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 02 கைதிகள் உயிரிழந்த நிலையில் 15 கைதிகள் காயமடைந்தனர்.
அன்றைய தினமே நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகாத நிலையில் 28 கைதிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வெசும மோசடியில் சிக்கிய மேலும் 2 அதிகாரிகள்! ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் குறித்து விசாரணை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |