இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்
இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,“ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்துமீறி தொழிலில் ஈடுபடுவது வடபகுதி கடற்றொழிலாளர்கள்களிடையே பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம்
கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் மூலம் அவர்களின் வருகையைக் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், இம்முறை தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம் முதல் அவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இலங்கை கடற்பரப்பில் மிக தீவிரமடைந்துள்ளது.

அண்மையில் தீவக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட கடல்வழிப் போராட்டத்தைக் கூட மத்திய அரசுகளோ அல்லது இலங்கை அரசோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
இந்திய கடற்றொழிலாளர்கள்களின் அழிவுகரமான தொழில் முறைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, எமது கடற்றொழிலாளர்கள் களின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |