நிழலில் வளரும் ஈரானின் Sleeper Cells அச்சுறுத்தல்! களத்தில் CIA - மொசாட்
உலகின் பல பகுதிகளில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “Sleeper Cells” குறித்து மீண்டும் சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.
சில நாடுகளில் நடந்த சமீபத்திய சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள், இந்த மறைமுக வலைப்பின்னல்கள் செயல்படத் தொடங்கியிருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இதற்கிடையில், ஈரானின் தலைநகர் Tehran-இல் ஏற்பட்டதாகக் கூறப்படும் திடீர் தீவிபத்துகள் மற்றும் கலவரத் தகவல்கள், அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள், நகரின் சில பகுதிகளில் தீ மற்றும் புகை எழுந்ததாக காட்டினாலும், அரசு தரப்பில் இருந்து இது குறித்து தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வழங்கப்படவில்லை.
மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்கள், ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் நீண்ட காலமாக வெளிநாடுகளில் அமைதியாக செயல்பட்டு, அரசியல் அல்லது இராணுவ பதற்றம் அதிகரிக்கும் நேரங்களில் திடீரென செயல்படக்கூடும் என்று எச்சரித்து வருகின்றன.
ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. “இவை அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்கள்” என Tehran கூறி, தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
பகுதியில் ஏற்கனவே நிலவும் பதற்ற சூழலில், இவ்வாறான தகவல்கள் உலகளாவிய பாதுகாப்பு கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
சர்வதேச சமூகம், நிலைமை மோசமடையாமல் இருக்க, துல்லியமான தகவல்களையும் தணிக்கையான நடவடிக்கைகளையும் வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |