ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி
ஈரானை தாக்குவதற்கு எதிரிகளுக்கு தங்கள் நிலத்தையோ அல்லது வசதிகளையோ பயன்படுத்த அனுமதித்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எண்ணெய் உற்பத்தியில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகள் விடைபெற வேண்டியிருக்கும் என ஈரானிய இராணுவத் தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் பிரிவின் தளபதியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் சில பாரசீக வளைகுடா நாடுகள் ஈரானின் எதிரிகளுக்குத் தங்கள் நிலத்தைப் பயன்படுத்த அனுமதித்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிலை தொடர்ந்தால் அந்த நாடுகளின் பொருளாதார உயிர்நாடி கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இலக்கு பட்டியல்
எவ்வாறாயினும், எந்த நாடுகளை நோக்கி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பதை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மேலும், ஈரானின் "இலக்கு பட்டியல்" தற்போது இராணுவ நிலைகளைத் தாண்டி விரிவடைந்துள்ளதாகவும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த வளைகுடா நாடுகளில் பல அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருப்பதுடன், அவற்றில் சில அமெரிக்க இராணுவத் தளங்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |