மத்திய கிழக்கின் வல்லரசாக இஸ்ரேல்...! நெதன்யாகு முழக்கம்
இஸ்ரேல் இன்று முன்னெப்போதையும் விட வலிமையான நாடாக உருவெடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அடைந்துள்ள வெற்றிகள் மற்றும் இராணுவ முன்னேற்றங்கள் குறித்து அரசு விழா ஒன்றில் அவர் விரிவாக உரையாற்றினார்.
இதன்போதே அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
புதிய வாய்ப்புகள்
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அமெரிக்காவுடன் இணைந்து உலகில் உள்ள தீய சக்திகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் முன்னின்று வழிநடத்துவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தல் அமைப்புகளுக்கு இஸ்ரேலியப் படைகள் பலத்த அடியைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்த நெதன்யாகு, இதன் மூலம் இஸ்ரேலை ஆபத்துக்குள்ளாக்கும் ஈரானின் திறனைத் தாங்கள் வெற்றிகரமாகச் சிதைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் பிராந்திய வல்லரசாக இஸ்ரேலின் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இந்தப் போர்க்காலச் சூழலிலும் புதிய சர்வதேசக் கூட்டணிகளை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு அமைதி வட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |