காலியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (02) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த இருவர், அவரது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு வானில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதேவேளை, சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்