கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் கவலை அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக மே மாதம் வழங்கப்பட்டதாகவும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மாதாந்தக் கொடுப்பனவு
இது இந்த ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும், கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அத்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள் தான்.
இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் இந்த அரசாங்கம் பொடு போக்காக உள்ளது ? கொடுப்பனவுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாததாலேயே கொடுப்பனவு தாமதம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப் பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது.
எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
