சிரியாவின் ஏவுகணை கிடங்கை உலுக்கிய இஸ்ரேலின் தாக்குதல்
சிரியா (Syria) மீது இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு படைகள் (ஐ.டி.எப்.) திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் லடாகியா பகுதியில் உள்ள ஏவுகணை கிடங்குகள் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த இடத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஒருவர் பலியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கூடிய ஏவுகணைகள்
சர்வதேச நாடுகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஏவுகணைகள் இந்த கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் குறித்த கிடங்குகளில் இருந்துள்ளன.
ஒழிப்பதற்கான பணி
இதனடிப்படையில் இந்த பகுதியில், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்பட கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபடும் என இது குறித்து இஸ்ரேல் படைகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
