ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேரிடி! இஸ்ரேலிய ராணுவத்தின் அதிரடி
தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தி வந்த நிலத்தடி உள்கட்டமைப்பை இஸ்ரேலிய ராணுவம் அழித்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளனர்.
மஜ்தல் ஸூன் நகரில் உள்ள 200 மீற்றர் (656 அடி) நீளமுள்ள சுரங்கப்பாதையை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்போது தெரவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த சுரங்கப்பாதையில் நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் ஏவுகணைகளும் இருந்ததாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் அறிவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளார்.

Image Credit: The Times of Israel
இந்த நிலையில் நெதன்யாகு, இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து அழித்து, வடக்குப் பகுதிகளில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றி, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்