சிவராமை படுகொலை செய்த புளொட்டை இணைத்தது தவறு: இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு
சிவராமை படுகொலை செய்த புளொட்
“இராணுவத்துடன் சேர்ந்து 2009 வரையும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட் இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரும் தவறு” என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கங்களின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினத்தையிட்டு நினைவேந்தலும் 'ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்' கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவ அதிரன் தலைமையில் நேற்று (29) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்
மேலும் “கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இலங்கை வரலாற்றிலே 1981 ம் ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கம் அக்கரைப்பற்று தொடக்கம் திருகோணமலை வரையிலான ஊடகவியலாளர்களை உள்ளடக்கி செயற்பட்ட சங்கமாகும்.
இருந்தபோதும் பல்வேறு கட்சிகளை இணைத்து ஒரு பலமான ஒரு அரசியல் தலமை உருவாக்க வேண்டும் என்பதற்காக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது அந்த செயற்பாட்டிலே வெற்றியும் கண்டது.
அவ்வாறு ஒரு பலமான அமைப்பாக மட்டக்களப்பு மண்ணில் இருந்தது ஆனால் துரதிஸ்டவசமாக அப்போது கருணா பிளவுபட்டநேரம் ஊடக சங்கங்கள் பிளவுபட்டுள்ளது.
எனவே இனிமேல் ஆவது அனைத்து ஊடக சங்கங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஊடகவியலாளர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள்
ஊடகவியலாளர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதை காண்கின்றேன்.
இன்றை நிலையில் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் தெரிவித்துள்ளார்.